உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்.
தாராபுரம் :
தாராபுரம் பஸ் நிலையத்தில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பவர் சேகர், அம்மன் நாகராஜ், முத்துலட்சுமி ,பழனிசாமி ,புனிதா, சக்திவேல், தேவிஅபிராமி, கார்த்திகேயன் மற்றும் நகராட்சி ஆய்வாளர் அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகரில் அனுமதி பெறாத பிளக்ஸ் மற்றும் சினிமா சுவரொட்டிகள் , விளம்பர சுவரொட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என கூறி விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்.