உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலையில் குடிநீர் ஆப்ரேட்டர்களுக்கு குளோரினேசன் பயிற்சி

Published On 2023-09-28 14:42 IST   |   Update On 2023-09-28 14:42:00 IST
  • மழைக்கால நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது

உடுமலை : 

பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை சார்பாக மழைக்கால நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி நடைபெற்றது.இதில் உடுமலை வட்டாரத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் திறப்பாளர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது நீர்நிலைகளை சுத்தம் செய்தல் மற்றும் க்ளோரினேசன் செய்தல் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர்,வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.அப்போது குளோரினேசன் எவ்வாறு செய்ய வேண்டும் என்று செயல்முறை மற்றும் குறும்படம் மூலமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News