உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்ற காட்சி. 

பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சிசுஉத்சவ்' நிகழ்ச்சி - 700 குழந்தைகள் பங்கேற்பு

Published On 2023-02-07 07:20 GMT   |   Update On 2023-02-07 07:20 GMT
  • விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
  • மழை நடனம், சாகசப் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.

திருப்பூர் :

திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில், 'சிசுஉத்சவ்' நிகழ்ச்சி 8வது ஆண்டாக கொண்டாடப்பட்டது.

இதில், மாவட்டத்தை சேர்ந்த, 700க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பாட்டு, நடனம், சமையல், கதை சொல்லுதல், கணிதத் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலான போட்டி, யோகா, வாசித்தல், அறிவை சோதித்தல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, மழை நடனம், சாகசப் பூங்கா, மேஜிக், உருவப்படம் வரைதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன், பிரன்ட்லைன் குழு பள்ளிகளின் முதல்வர்கள் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்."

Tags:    

Similar News