உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் பள்ளியில் சந்திராயன்-3 விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-10-07 16:30 IST   |   Update On 2023-10-07 16:30:00 IST
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அ.கந்தசாமி தலைமை தாங்கினார்.
  • சந்திராயன்-3 குறித்து வெளிவந்த படங்கள், கட்டுரைகள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளியில் சந்திராயன்-3 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அ.கந்தசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி சந்திராயன்-3 குறித்து விரிவாக பேசினார். மேலும் ஆசிரியர் அக்பர் அலி விண்வெளி விஞ்ஞானிகள், இயக்குநர், தலைவர்கள் ஆற்றிய பணிகள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.

இதில் உலக அளவில் சரித்திரம் படைத்த இந்திய விண்வெளி சந்திராயன்-3 குறித்து வெளிவந்த படங்கள், கட்டுரைகள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. முடிவில் உதவி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News