உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முதியோர் இல்லங்களை பதிவு செய்ய வேண்டுகோள்

Published On 2022-08-15 06:19 GMT   |   Update On 2022-08-15 06:19 GMT
  • பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் :

தமிழக அரசின் விதிமுறைகளின் படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறும், அவ்வாறு பதிவு இல்லாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்:35,36 தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் வினித் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News