அ.தி.மு.க. சார்பில் - அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது
- கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
பல்லடம் :
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், கே.பி.பரமசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், முன்னாள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு பேச்சாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்தகூட்டத்தில்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம்,அரி கோபால், புத்தரச்சல் பாபு, மற்றும் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜ், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.