உள்ளூர் செய்திகள்
அவினாசியில் சுற்றி திரிந்த மூதாட்டி திடீர் சாவு
- 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.
- சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவினாசி :
அவினாசி அருகே குப்பாண்டம்பாளையம் கிராமம் புது ஊஞ்ச பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் ஊர் விவரம் பற்றி தகவல் தெரிந்தால் அவினாசி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவினாசி போலீசார் தெரிவித்துள்ளனர்.