உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வீரருக்கு அ.தி.மு.க.வினர் பாராட்டு தெரிவித்த காட்சி.

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற திருப்பூர் வீரருக்கு அ.தி.மு.க. பாராட்டு

Published On 2022-08-29 05:28 GMT   |   Update On 2022-08-29 05:28 GMT
  • இறுதி ஆட்டத்தில் பாண்டிச்சேரியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
  • 9விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

திருப்பூர் :

ஆந்திராவில் நடைபெற்ற தேசிய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் பாண்டிச்சேரியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகனாக 5 விக்கெட் கைப்பற்றிய மாற்றுத்திறனாளி வீரரான திருப்பூரை சேர்ந்த முகமது இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் 9விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சு.குணசேகரன், பழனிசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்து கவுரவித்தனர். அப்போது கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்பட திரளானவர்கள் உடனிருந்தனர்.  

Tags:    

Similar News