உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரியில் புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடக்கம்

Published On 2023-07-29 08:00 GMT   |   Update On 2023-07-30 02:44 GMT
  • 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.
  • கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்படவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், 2023-24 வது கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. பாடப்பிரிவைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெறப்ப ட்டுள்ளது. எம்.பி.ஏ. பட்ட வகுப்பில் சோ்வதற்கு டான்செட் எழுதிய மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கல்லூரி விருப்பத் தோ்வு மற்றும் கலந்தாய்வு இணைய வழியில் இன்று முதல் நடைபெறுகிறது.

இதுதொடா்பான விவரங்களை இணையதளம் https://cgac.in/ மூலமாக மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News