உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சண்டை - வாலிபரை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்குதல்

Published On 2023-08-02 05:25 GMT   |   Update On 2023-08-02 05:25 GMT
  • மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் முருகம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21). இவருக்கும் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மங்கலம் சாலை புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News