உள்ளூர் செய்திகள்

ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் வழங்கிய சர்டிபிகேட். 

அவினாசியில் 5 வயது சிறுமி 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை

Published On 2023-06-02 08:47 GMT   |   Update On 2023-06-02 08:47 GMT
  • தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
  • சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).

இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News