உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
- பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன், சிவராஜ், பரமசிவம் ஆகிய 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.