உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி. 

திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-08-21 08:11 GMT   |   Update On 2022-08-21 08:11 GMT
  • 1341 இடங்களில் இன்று நடைபெற்றது.
  • பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வய–திற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் கொரோனா தடுப்பூசி முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 1341 இடங்களில் இன்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெற்றது. இந்த பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News