உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கேட்பாரற்று கிடக்கும் 319 இருசக்கர வாகனங்கள் - உரியவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்தை அணுகலாம்

Published On 2023-03-30 05:01 GMT   |   Update On 2023-03-30 05:01 GMT
  • 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது.
  • வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.

 திருப்பூர் :

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 வருடங்களாக 319 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று உள்ளன. 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து வாகனங்களின் உரிமையை கோரலாம் என்று தெற்கு போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News