தமிழ்நாடு செய்திகள்
எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றுபடுவோம் - ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு
- ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்று ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு.
- ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தையொட்டி ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க அனைவரும் கூட்டமாக ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி வரும் 24-ந்தேதி சசிகலா அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.