உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் டிரைவரை கொலை செய்த ஆம்புலன்ஸ் உரிமையாளா் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-09-05 07:49 GMT   |   Update On 2023-09-05 07:49 GMT
  • விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
  • இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

திருப்பூர்:

திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருந்தவா் முருகன் (வயது 48). இவரிடம் விக்னேஷ் (31), அசோக்குமாா் (28) ஆகியோா் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா். முருகனின் நண்பா் காட்டுராஜா (29). விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அவரை முருகன் பணியை விட்டு நீக்கியுள்ளாா். இதனிடையே, முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபா் 17 ந் தேதி இருந்துள்ளனா்.

அப்போது அங்கு வந்த விக்னேஷ் முருகனிடம் பணமும், வேலையும் கேட்டுள்ளாா்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகன் உள்பட 3 பேரும் சோ்ந்து விக்னேஷை கீழே தள்ளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா். 

Tags:    

Similar News