உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வீடு புகுந்து திருட முயன்ற 3 வடமாநில வாலிபர்கள் கைது

Published On 2022-07-02 05:20 GMT   |   Update On 2022-07-02 05:20 GMT
  • வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை.
  • வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடினர்.

பல்லடம் :

பல்லடம் அருகேகாமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது37).

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்குச் சென்ற சம்பத்குமாரை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்குள் யாரோ வந்தது போலவும், சமையலறைக்குள் இருந்து யாரு என கேட்டதாகவும், பதில் வராததால் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

போலீசார்விசாரணையில் சம்பத் குமாரின் வீட்டிற்கு சென்று திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பஸ்வான் (30,) பந்தேப் பக்டி(32) பாபன் புயனா(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News