உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வெள்ளகோவிலில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-08-16 15:52 IST   |   Update On 2023-08-16 15:52:00 IST
  • சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.
  • புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் வைத்திருந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போன்று வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News