உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் அருகே மாணவனை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-09-23 15:06 IST   |   Update On 2023-09-23 15:06:00 IST
  • சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான்.
  • பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெரிய காட்டு பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 42 ). இவரது மகன் சரத் (17 ). சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் (24), சஞ்சய் காந்த் (23) ஆகிய இரண்டு பேரும் சரத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த சரத்தின் தந்தை பாக்யராஜிடமும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்த் ஆகிய இருவரும் பாக்யராஜ் மற்றும் சரத் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்தி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News