உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் விழா நடைபெற்ற காட்சி.

வெள்ளகோவிலில் பொது சுகாதாரத் துறை 100வது ஆண்டு விழா கொண்டாட்டம்

Published On 2022-09-28 11:23 GMT   |   Update On 2022-09-28 11:23 GMT
  • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
  • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

வெள்ளகோவில் :

பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News