உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-08 15:08 IST   |   Update On 2023-08-08 15:08:00 IST
  • குடும்ப தகராறில் விரக்தி
  • வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் சந்தை மேடை சேர்ந்தவர் தயாளன் (வயது 40), கூலி தொழிலாளி.

இவரது மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தயாளன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News