உள்ளூர் செய்திகள்

பைக்கில் தவறி விழுந்த பெண் சாவு

Published On 2023-08-12 08:58 GMT   |   Update On 2023-08-12 08:58 GMT
  • குடையை விரித்தபோது பரிதாபம்
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 50), தொழிலாளி.

இவரது மனைவி சுகுணா (45). வீரமணி மற்றும் சுகுணா ஆகியோர் நேற்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பைக் வீரமணி ஓட்ட, சுகுணா பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார்.

பொன்னேரி அருகே சென்ற போது லேசான தூரல் மழை பெய்தது. அப்போது சுகுணா, கையில் வைத்திருந்த குடையை விரித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரை வீரமணி மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகுணா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News