கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
- துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது
- சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்ப டுகிறது.
இதில் 4-வது வார்டு மற்றும் 9-வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கழிவுநீர் எப்போதும் அதிக அளவு தேங்கியிருப்பதால், உடைப்பு ஏற்பட்ட பைக் வழியாக கழிவுநீர், குடிநீரோடு கலக்கிறது.
இதனை சற்றும் கவனிக்காத பொதுமக்கள், கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் கலந்த குடிநீரையே குடிப்பதுடன், சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பா டுகளுக்கும் உபயோகித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, மணிமாறன், ஜெயபால், விக்கி, சாமு, மாதேஸ்வரன், விமல், கலையரசன், மாதேஸ்வரி உள்ளி ட்டோருக்கு திடீரென மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபா தைகள் ஏற்பட்டது.
அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் உள்ளவர்க ளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, அந்த வழியாக குடிநீரோடு, கழிவுநீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கவனிக்காமல் பொது மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் திடீரென உடல் பாதிப்புகள் ஏற்பட காரணம் என தெரிய வந்தது.
இதனை அடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை யில் சுகாதாரத் துறையினர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பரி சோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.
மேலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.