உள்ளூர் செய்திகள்
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்னால் சென்ற லாரியின் டிரைவர் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 55) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் லாரியில் சிக்கியிருந்து டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.