உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் கூடுதல் இயக்குனர் கள ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்

Published On 2023-02-03 10:20 GMT   |   Update On 2023-02-03 10:20 GMT
  • சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரி உத்தரவு
  • பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

அதிகாரி ஆய்வு

இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் சாமுவேல் இன்பதுரை, ஊரக வளர்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளர் கணேஷ் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையிலிருந்து நேற்று ஏலகிரி மலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிக்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்புகள் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், ஏலகிரி மலை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் எந்திரத்தின் அறை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பிளாஸ்டிக் குப்பைகளை தூளாக்கும் இயந்திரத்தை பார்வையிட்டு குப்பை கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை புரியும் போது ஊராட்சி சார்பில் செக் போஸ்ட் அமைத்து பயணிகள் யாருவது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா என சோதனை செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார.

மேலும் இதனைத் தொடர்ந்து நீலாவூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்தனர்.

மேலும் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியை ஆய்வு செய்தனர்.

பின்னர் ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் குறித்தும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர்கள் சேகர், பழனிச்சாமி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.

மேலும் இந்த கள ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.திருமால் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News