உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
- நல திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைகிறதா என கேட்டறிந்தார்
- அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆலங்காயம் வட்டார அரசு சமுதாயம் சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், செயல்பாடுகள், நிலைய வளாக தூய்மை, தேசிய குடற்புழு நீக்க திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைகிறதா என்று கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச. பசுபதி மருத்துவ பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.