உள்ளூர் செய்திகள்

காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன

Published On 2022-09-13 09:55 GMT   |   Update On 2022-09-13 09:55 GMT
  • குடிநீர் வீணாகியது
  • சரி செய்யும் பணி தீவிரம்

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

இப்பகுதி மக்களுக்காக காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வாணியம்பாடி நகர பகுதியில் இருந்து குடிநீர் குழாய் மூலம் பாலாறு படுகையோரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பாலாறு வழியாக உதயேந்திரம் பேரூராட்சிக்கு குடிநீர் குழாய் எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இதில் உதயேந்திரம் பேரூராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் பல நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் பாலாற்றில் வீணாக சென்றது.

இன்று காலையில் பாலாற்றில் நீர் வரத்து குறைந்தது. குடிநீர் குழாயை பேரூராட்சி அதிகாரிகள் பாலாற்று வெள்ளத்தில் இருந்து எடுத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News