உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல்

Published On 2023-04-11 14:39 IST   |   Update On 2023-04-11 14:39:00 IST
  • குறைதீர்வு கூட்டத்தில் புகார்
  • விலைப்பட்டியல் வைக்க வலியுறுத்தல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத் தில் டாஸ்மாக் கடை களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்வ தாகவும், இதனை தடுக்க கடை முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று குறை தீர்வுகூட் டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் கெலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக் கள் குறை தீர்வுக்கூட்டம் இ கலெக்டர் பாஸ்கரபாண்டி னர் யன் தலைமையில் நடந்தது. பத்து இதில் சாலை வசதி, குடிநீர் முன் வசதி, வீட்டுமனை பட்டா, னர் முதியோர் உதவித்தொகை, சா பொதுநலன் சார்ந்த பிரச்சி புப் னைகள் குறித்து 305 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

கூட்டத்தில் திருப்பத்தூர் 5 மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில்; திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் - வரை வருவாய் ஈட்டி வருகின்றனர் இதை தடுக்கஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் மதுப் பிரியர்களுக்கு கட்டாயமாக பற்று சீட்டு வழங்க வேண்டும்.

மதுபான வகைகளின் விலையை குறிப்பிட்டு கடை முன்பாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மேலும் கூடுதல் பணம் வசூல் செய் யும் கடை விற்பனையாளர் கள், மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டு இருந்தது.

Tags:    

Similar News