என் மலர்
நீங்கள் தேடியது "கூடுதல் பணம் வசூல்"
- குறைதீர்வு கூட்டத்தில் புகார்
- விலைப்பட்டியல் வைக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத் தில் டாஸ்மாக் கடை களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்வ தாகவும், இதனை தடுக்க கடை முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று குறை தீர்வுகூட் டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் கெலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக் கள் குறை தீர்வுக்கூட்டம் இ கலெக்டர் பாஸ்கரபாண்டி னர் யன் தலைமையில் நடந்தது. பத்து இதில் சாலை வசதி, குடிநீர் முன் வசதி, வீட்டுமனை பட்டா, னர் முதியோர் உதவித்தொகை, சா பொதுநலன் சார்ந்த பிரச்சி புப் னைகள் குறித்து 305 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
கூட்டத்தில் திருப்பத்தூர் 5 மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில்; திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் - வரை வருவாய் ஈட்டி வருகின்றனர் இதை தடுக்கஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் மதுப் பிரியர்களுக்கு கட்டாயமாக பற்று சீட்டு வழங்க வேண்டும்.
மதுபான வகைகளின் விலையை குறிப்பிட்டு கடை முன்பாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மேலும் கூடுதல் பணம் வசூல் செய் யும் கடை விற்பனையாளர் கள், மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டு இருந்தது.
- மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் ரூபாய் 2000 முதல் 5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
- பரிசலில் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் வசூலிப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி வெளியிடப்பட்டது.
தருமபுரி,
ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வருவது வழக்கம்.
தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து, ஆயில் மசாஜ் செய்து, இங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமையல் அருந்தியும் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூல் செய்கின்றனர்.
குறிப்பாக பரிசல் சவாரி செய்வதற்கு ரூபாய் 750 கட்டணம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் ரூபாய் 2000 முதல் 5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இதனால் ஏழை எளிய மக்கள் பரிசலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றன.
பரிசலில் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் வசூலிப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோடை விடுமுறை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






