உள்ளூர் செய்திகள்

தார் சாலை அமைக்கும் பணி

Published On 2023-08-29 09:19 GMT   |   Update On 2023-08-29 09:19 GMT
  • நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
  • ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் நடைபெறுகிறது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிக்குட்பட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சிக்குட்பட்ட போலீஸ் நிலைய ரோடு சாலையானது நகராட்சியின் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளின் இருபுறமும் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று, அதன் பிறகு சாலை முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பும் பணி நடைபெற்று வந்தது.

மேலும் அந்தப் பணியும் நிறைவுற்று நேற்று போலீஸ் நிலைய ரோடு சாலைக்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, பொறியாளர் பி. சங்கர், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News