உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பைகள், டீ கப் பறிமுதல்

Published On 2023-09-27 13:10 IST   |   Update On 2023-09-27 13:10:00 IST
  • 250 கிலோ சிக்கியது
  • ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆலங்காயம்:

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர் கேசவன் ஆகியோர் இணைந்து வாணியம்பாடி பஸ் நிலையம், சி.எல். சாலை, காதர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிஎல் சாலையில் உள்ள சையது பிளாஸ்டிக் ஏஜென்சி மற்றும் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் பழக்கடைகளில் சோதனையிட்டனர்.

2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகள், தேனீர் கப்புகள் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்தாதவாறு அங்கேயே கிழித்தனர். மேலும் ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும், மற்றொரு பழகடைக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து நெகிழி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஆய்வின் போது நகராட்சி களப்பணி உதவியாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அருள், அலெக்ஸ், பெருமாள், கஜேந்திரன், சவுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News