உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தல் 3 பேர் மீது வழக்கு

Published On 2023-06-09 09:53 GMT   |   Update On 2023-06-09 09:58 GMT
  • மாட்டுவண்டிகள் பறிமுதல்
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில், ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு ஈடுபட்ட மாதனூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 31), பசுபதி (22) மற்றும் முத்தரசன் (32) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News