உள்ளூர் செய்திகள்
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவில் ஆலங்காயம் நிம்மியம்பட்டு, வெள்ள க்குட்டை சுண்ணாம்பு பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த கன மழை காரணமாக நிம்மியம்ப ட்டிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அதே போல் வாணியம்பாடி நியூடவுன், பஸ்நிலையம், ஜனதாபுரம் , செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த கனமழை யால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.