உள்ளூர் செய்திகள்
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் டவுன் பழைய வாணியம்பாடி ரோட்டில் உள்ள பெட்டி கடையில், முகமது நபிஸ் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.