உள்ளூர் செய்திகள்
- பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் தார்வழிப் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 67). தனியார் ஷீ கம்பெனியில் காவலாளி. இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்படு சென்றார்.
சாலையை கடக்கும் போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சல் லாரி குணசேகரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூரியர் பார்சல் லாரி டிரைவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.