உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு தம்பதி இந்து முறைப்படி மீண்டும் திருமணம்

Published On 2023-08-16 15:14 IST   |   Update On 2023-08-16 15:14:00 IST
  • வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்
  • மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதிகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின்படி வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்.

அப்போது காதலை வெளிப்படுத்தும் விதமாக மோதிரம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News