உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி மோதி விவசாயி பலி
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி ரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55) விவசாயி.
இவர் நேற்று 3 மணியளவில் தனது ைபக்கில் ஆம்பூரில் இருந்து மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மினி லாரி ஒன்று கோவிந்தசாமி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.