என் மலர்
நீங்கள் தேடியது "பைக் மீது லாரி மோதல்"
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம், (42) இவர் நேற்று மாலை தனது பைக்கில் கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி அருணாச்சலம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரிக்கு அடியில் பைக் சிக்கி நொறுங்கியது.
படுகாயம் அடைந்த அருணாச்சலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி இருந்த வாகனத்தை மீட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி ரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55) விவசாயி.
இவர் நேற்று 3 மணியளவில் தனது ைபக்கில் ஆம்பூரில் இருந்து மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மினி லாரி ஒன்று கோவிந்தசாமி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார்
- வாலிபர் படுகாயம்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதி யைச்சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 38 ) .
ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் குமார் ( 58 ). இருவரும் நேற்று மதியம் வேலூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை செந்தில் குமார் ஓட்டி வந்துள்ளார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது . இதில் தேவராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செந்தில் குமார் படுகாயமடைந்து மேல்வி ஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவராஜ்குமார் உடலை ஆற்காடு டவுன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






