உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

Published On 2023-04-13 14:52 IST   |   Update On 2023-04-13 14:52:00 IST
  • வாலிபர் கைது
  • ஜெயிலில் அடைப்பு

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பி. கட்டுப்பாட்டு அறைக்கு மின்னூர் ஊராட்சி எம்.சி.ரோட்டு சேர்ந்த பொதுமக்கள் வாலிபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசில்சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மின்னூர் எம்.சி.ரோட்டில் வசிக்கும் சுகன் என்கிற பப்லு வயது (22) என்பவர் பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. பின்னர் பப்லுவை பிடித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News