உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக பயிர்களை நாசம் செய்யும் யானைகள்

Published On 2023-06-21 08:55 GMT   |   Update On 2023-06-21 08:55 GMT
  • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகில் பொன்னப்பல்லியில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் கேழ்வரகு, காய் கறி செடிகள் பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளது.

இதனால் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகினர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட கோரி வலியுறுத்தினர்.

Tags:    

Similar News