பைக் மீது லாரி மோதி கட்டிட மேஸ்திரி சாவு
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 43),கட்டிட மேஸ்திரி.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணபதி(36) என்பவருடன் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி பைக்கில் சென்றார்.
அப்போது சுண்ணா ம்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் செல்வராஜை தேடி வருகின்றனர்.