உள்ளூர் செய்திகள்

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக நடன ஆசிரியர் கந்தன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திட்ட அலுவலர் செல்வராசு நினைவுப் பரிசு வழங்கினார்.

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு

Published On 2023-01-28 15:45 IST   |   Update On 2023-01-28 15:45:00 IST
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு
  • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி தமிழ்நாடு என்ற அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி,

உணவுத் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதன்நிறைவு விழா நேற்று நடந்தது. திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர், சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகளுக்கு கேடயங்களும், கலை பண்பாட்டுத் துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

கண்காட்சியை கடந்த 10 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திமக்கள் தொடர்பு அலுவலர் மோகன், உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் செய்திருந்தனர்.

Tags:    

Similar News