உள்ளூர் செய்திகள்

பதட்டமான இடங்கள் குறித்து கமாண்டோ வீரர்கள் ஆலோசனை

Published On 2023-08-22 13:44 IST   |   Update On 2023-08-22 13:44:00 IST
  • 10 நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க திட்டம்
  • சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளதா? என சோதனை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான அல்லது சாதி மோதல் பிரச்சனையாக உள்ள பகுதிகள் உள்ளனவா என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோரிடம் மத்திய அதிவிரைவு படை கமாண்டர் சீனிவாசன் தலைமையில் 10 கமாண்டோ வீரர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் எந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகள் உள்ளனவா? சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளதா? குற்றங்கள் தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 நாட்கள் தங்கி இருந்து கண்கா ணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News