உள்ளூர் செய்திகள்

பைக் மீது கல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2023-04-12 14:37 IST   |   Update On 2023-04-12 14:37:00 IST
  • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியை சேர்ந்த முஜிமில் அகமது (வயது 35). இவர் உமராபாத் அருகிலுள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சான்றோர் குப்பம் தனியார் பள்ளி அருகே வந்த போது குடியாத்தம் தனியார் கல்லூரியின் பஸ் இவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முஜிமில் அகமது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News