உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் கோஷ்டி மோதல்

Published On 2023-06-14 14:17 IST   |   Update On 2023-06-14 14:17:00 IST
  • ஒருவர் கைது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ருக்மணி. நேற்று கண வன்- மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த ஜெய் சங்கர் சொத்து தகராறு காரண மாக தன்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்து தகராறு செய் துள்ளார்.

தகராறு முற்றி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதில் உஷாராணி மற் றும் ஜெய்சங்கர் ஆகிய இருவ ரையும் தாக்கி கொலை மிரட் டல் விடுத்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ருக்மணி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ருக்மணி கொடுத்த புகாரின் பேரில் உஷாராணி மற்றும் ஜெய்சங் கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

ருக்மணி மற் றும் கனகராஜ் இருவரும் தாக் கியதாகஉஷாராணி கொடுத்த புகாரின்பேரில் ருக்மணி மற்றும் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News