உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2023-06-25 14:00 IST   |   Update On 2023-06-25 14:00:00 IST
  • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
  • ஜெயிலில் அடைத்தனர்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அபூபக்கர் வயது (32) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ரெட்டி தொப்பு பகுதியில் சேர்ந்த ஓரு பெண்ணிடம் செல்போன் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் வாலிபர் போனில் பேச முயற்சி செய்தார்.

அந்த பெண் இவரை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் தினமும் இந்த பெண்ணிற்கு வாலிபர் போன் செய்து வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டிற்கு சென்று அபுபக்கர் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பெண்ணிடம் கையை பிடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபூபக்கரை ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News