உள்ளூர் செய்திகள்

வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2022-12-22 10:17 GMT   |   Update On 2022-12-22 10:17 GMT
  • பயணிகள் விரட்டி பிடித்தனர்
  • ரூ.1000 பறிமுதல்

ஜோலார்பேட்டை:

வாணிய ம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அப்துல் (வயது 38). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று கோவையி லிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அப்துல், டிபன் வியாபாரம் செய்து கொண் டிருந்தார். அப்போது வாலி பர் ஒருவர் அப்துல் பாக்கெட் டில் வைத்திருந்த 1,000 ரூபாயை திருடிக் கொண்டு ரெயிலிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் கூச்சல் போடவே பயணிகள் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து ரெயில்வே போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார். விசார ணையில் அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (31) என்பது தெரியவந்தது.

அவரை ரெயில்வே போலீ சார் கைது செய்து, அவரிடமி ருந்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News