உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
- வழக்குப் பதிவு செய்து விசாரணை
- வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
ஜோலார்பேட்டை:
காட்பாடி அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் இருந்து தவறி விழந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.