உள்ளூர் செய்திகள்

வீட்டிற்கு நுழைந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு

Published On 2023-08-05 08:20 GMT   |   Update On 2023-08-05 08:20 GMT
  • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
  • காப்பு காட்டில் விட்டனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரளா வீட்டில் இருந்த போது திடிரென நல்ல பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேனர். உடனடியாக இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூலம் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ½ மணி நேரம் போராடி பிடித்து

திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News