உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட பாம்பு
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிப்பட்டது
- வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்
- ஏலகிரி மலை காப்பு காட்டில் பாம்பை விட்டனர்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் வசித்து வரும் பாண்டியன் என்பவரின் வீட்டின் உள்ளே திடிரென பாம்பு புகுந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் பாம்பை அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.